தேடுங்கள்

Sunday, January 9, 2011

சிந்தனை

நல்ல வழியில் செலுத்தபடும் சிந்தனை ஆக்கபூர்வமாகும்,
தீய வழியில் செலுத்தபடும் சிந்தனை அழிவாகும்.
தன் சிந்தனை அருகில் இருப்பவனுக்கு தெரியாது,
இது எவ்வளவு பெரிய வலிமை ஒருவனுக்கு.
பிடிக்காதவன் அருகில் அம்ர்ந்து கூட அவனுக்கு பிடித்த மாதிரி பேச முடியும்.
ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது ஆணின்;
இயற்கை அழகைக் கண்டவுடன் ஒரு ஓவியனின், ஒரு கவிஞனின்;
சிந்தனை எங்கெல்லாம் செல்லுமோ, அது எவருக்கும் தெரியாது.

எதனைத் தேடுகிறேன்

கற்றது பொறியியல், வேலை
கிடைத்தது மென்பொருள் துறையில்
இழந்து தவிப்பது தமிழ்நாட்டு உணவை, சென்ற ஆண்டுவரை
மறந்தது தமிழ் படிப்பதை, அலுவலகத்தில்
பேசுவது போலியாய் ஆங்கிலம், தமிழ் நண்பனிடம் கூட
சொல்வது ஹாய் , மறந்தும்கூட
சொல்வதில்லை வணக்கமென்று

இன்பம் - துன்பம்


நீ ஏன் இன்பத்தை அதிகம் வெளிக்காட்டுவது இல்லை என்றனர்
நான் துன்பத்தை வெளிக்காட்டியதைப் பார்த்திருக்கிறீர்களா என்றேன்
இடுக்கண் வருங்கால் நகுக என்கிறார் வள்ளுவர்,
இயற்கையே இனி நீ குடுக்கும் இன்பமும் வேண்டாம், துன்பமும் வேண்டாம், என்கிறது துறவு.
இந்த உலகத்தில் நாம் இன்பம் என்று கருதும் ஒவ்வொரு பொருளும், உண்மையில் நாம் சிக்கிக் கொண்ட கண்ணி வலையே (trap) என்பதே துறவியின் மன நிலை
இவன் எதற்காக இதையெல்லாம் சொல்கிறான் என்று நினைக்கிறீர்களா :)
ஒன்றுமில்லை நான் சொல்ல விரும்புவது இதைத்தான்
இன்பம் வரும்பொழுது விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்காமலும்
துன்பம் வரும் துவண்டு விழாமலும் இருங்கள்
மேலும் இன்பம் வரும்பொழுது ரசிக்கிறேன் என்று அடுத்தர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்


Wednesday, January 5, 2011

மனிதன் புவியின் புற்று நோய்

மனிதன் கோபம் கொள்ளும் சில வேளையிலே மற்ற உயிரினங்களின் பெயரைக் கொண்டு திட்டுகிறான்;

மற்ற உயிரினங்கள் கோபம் கொள்ளும் எல்லா வேளையிலுமே மனிதா என்று திட்டுமோ?

தான் ஒருவன் வாழ்ந்தால் போதுமென்ற எண்ணம் கொண்ட மனிதன் புவியை அழித்திக்கொண்டிருக்கிறான்;

காற்று மாசுருதல், பருவநிலை மாற்றம், வெப்பநிலை மாற்றம் போன்றவற்றால் பல உயிரினங்கள் ஏற்கனவே அழிந்து விட்டன, மேலும் அழியப் போகின்றன;

மனிதன் செய்கின்ற தவறுக்காக மற்ற உயிரினங்கள் அழிய வேண்டுமா?