
நீ ஏன் இன்பத்தை அதிகம் வெளிக்காட்டுவது இல்லை என்றனர்
நான் துன்பத்தை வெளிக்காட்டியதைப் பார்த்திருக்கிறீர்களா என்றேன்
இடுக்கண் வருங்கால் நகுக என்கிறார் வள்ளுவர்,
இயற்கையே இனி நீ குடுக்கும் இன்பமும் வேண்டாம், துன்பமும் வேண்டாம், என்கிறது துறவு.
இந்த உலகத்தில் நாம் இன்பம் என்று கருதும் ஒவ்வொரு பொருளும், உண்மையில் நாம் சிக்கிக் கொண்ட கண்ணி வலையே (trap) என்பதே துறவியின் மன நிலை
இவன் எதற்காக இதையெல்லாம் சொல்கிறான் என்று நினைக்கிறீர்களா :)
ஒன்றுமில்லை நான் சொல்ல விரும்புவது இதைத்தான்
இன்பம் வரும்பொழுது விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்காமலும்
துன்பம் வரும் துவண்டு விழாமலும் இருங்கள்
மேலும் இன்பம் வரும்பொழுது ரசிக்கிறேன் என்று அடுத்தர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்
No comments:
Post a Comment