
கொட்டாவி பற்றி வலையில் சுட்டது ;-)
கொட்டாவி. இந்த வார்த்தையைப் படித்து உள்வாங்கிகொண்ட ஒரு சில நொடிகளிலேயே கொட்டாவி விட்டவரா நீங்கள் ? அப்படின்னா நீங்களும் நம்மள மாதிரிதான்.திருவண்ணாமலைய (பேரரசு படமில்ல) நினைச்சாலே முக்தியாம். அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மைங்கிறது, நான் அனுபவிச்சதில்ல. ஆனா, கொட்டாவியை பத்தி நினைச்சாலே, கொட்டாவியா வரும். நினைக்க நினைக்க, அதுவும் வந்துக்கிட்டேயிருக்கும். சரி. இதனால, எதாவது உபயோகம் இருக்குதா பாஸ்னு கேட்கற யூத்துங்க மட்டும் காதைக்கொடுங்க. இப்ப பஸ்ஸில போயிக்கிட்டிருக்கிறீங்க. ஒரு பிகர் நம்மளப் பாக்குதா,இல்லயான்னு தெரியாத அளவுக்கு ரொம்ப கெத்தா இருக்குது. அதைக் கண்டுபிடிக்கத்தான் இந்த கொட்டாவி டெக்னிக். நீங்க கொட்டாவி விட்டுட்டு,கொஞ்ச நேரம் அந்தப் பொண்ணையே கவனிச்சுப்பாருங்க. அட, நைஸாத்தான். உடனே, அந்தப்பொண்ணும் கொட்டாவி விட்டாலோ, இல்ல நாசுக்கா அதை சமாளிச்சாலோ, உடனே பம்பாய் படத்தில அர்விந்தசாமி மனிஷா கொய்ராலவ பாக்கிற மாதிரி( கண்ணாளனே.. பாட்டில்)கெத்தாப் பருங்க. நான் எங்கப்போறது கொட்டாவிக்குன்னு யாராவது கேட்கிறீங்களா என்ன? அதான் பாஸ், நினைச்சாலே முக்தி ச்சீ..கொட்டாவி வருமே.
No comments:
Post a Comment